Wednesday, 2 October 2024

மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே


அந்திப் பூச்சந்தையிலே மாடனும்

ஆடிக் கொண்டாடி வரான்

சுந்தரத் தோழனுக்கு மாடனும்

சொல்லிக் கொண்டாடி வரான்

( மாடன் வரானே


அந்தகாரப் பேய்களெல்லாம்

அங்கிருந்து ஆடிக் கொண்டாடி வர

தெந்தினத் தினாவென்று மாடனும்

ஆடிக் கொண்டாடி வரான்

( மாடன் வரானே


மஞ்சளைப் பூசிக் கொண்டு மாடனும்

மஞ்சள் நீராடையிலே

வங்காள இசக்கியுடன் மாடனும்

மாடோடும் கையிலேந்தி

( மாடன் வரானே


கையில் குண்டாந்தடியும் மாடனுக்குக்

காலினில் சல்லடமாம்

கண்கள் தீப்பொறிப் போல மாடனுக்குக்

கழுத்துக்குத் தாவடமாம்

( மாடன் வரானே


வெண்பட்டுத் தானுடுத்தி மாடனும்

வேட்டைக்குப் போகையிலே

வெறிக்கல் இசக்கி வந்து மாடனைக்

கும்பிட வந்தாளாம்

( மாடன் வரானே


திருநீறுப் பூசிக் கொண்டு மாடனும்

தீச்சட்டிக் கையிலேந்தி

தெற்கு திசை நோக்கி மாடனும்

சீறி அலறி வரான்

( மாடன் வரானே


கருத்த சித்தாடை இசக்கி

கையில் வளை அடுக்கி

காட்டெருமை மீதில்

மாடனைக் காணவே வந்தாளாம்

( மாடன் வரானே


வீரபத்ரனுடன் மாடனும்

வேகமாய் முன் நடக்க

மணிகண்டர் சன்னதியில்

மாடனும் விந்தையாய் ஆடி வரான்


மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

மாடன் வரானே கம்பத்தடி மாடன் வரானே

No comments:

Post a Comment