சபரி மலைவாசா
சபரி மலைவாசா தேவா சரணம் நீ ஐயப்பா தேவா (சபரி)உறவு எல்லாம் இங்கே உண்மை இல்லை (2)
பிறவி பயன்பெற அருள் ஈசா (சபரி)
வாழ்க்கை எனும் பயணம் காரிருளில் அய்யா
வழியறியாதலையும் நேரம்
உன் திரு தீபத்தின் பொன்னொளி காட்டியே
அருள்மழை பொழிகுவாய் ஐயப்பா
உன்னை அடைந்திட ஒரு வழி செய்யப்பா (சபரி)
சொந்த பந்தங்கள் காத்திட அலைந்திடும்
வாழ்க்கை வாழ்ந்திடல் தேவையோ
சூன்யமன்றோ கானல் நீரல்லவோ வாழ்க்கை
நித்தியமானவன் நீயன்றோ
என்றும் சத்தியமானவன் நீயன்றோ (சபரி)
No comments:
Post a Comment