திருப்பனையில் உதித்தவனாம் தீராத வினைகள் தீர்ப்பவனாம்
வள்ளி மாநகரில் வடதிசையில் அமர்ந்தவனாம்
நினைத்து துதிப்போர்க்கு நெஞ்சினில் நிறைந்தவனாம்
ஏற்றி தொழுபவர்க்கு எதிரில் வந்து நிற்பவனாம்
மனதார துதிப்பவர்க்கு மங்களங்கள் அருள்பவனாம்
பாடி துதிப்பவர்க்கு பக்கத்தில் வருபவனாம்
பேச்சியம்மா துணை கொண்டு பேரின்பம் அளிப்பவனாம்
என்றென்றும் துதிப்பவர்க்கு எங்கெங்கும் நிறைந்தவனாம்
சிவபனை ஆண்டவனாம் சீரான பேருடையான்
சிக்கலை தீர்ப்பவனாம் சிந்தை குளிர்விப்பவனாம்
என்றென்றும் துணையிருப்பான் எங்கள் குலநாயகனும்
சிந்தை மகிழ்ந்தும் சீருடன் துதிக்கும்கால்.
--------- * ------------------ * ---------
எண்ண எண்ண இனிக்குதய்யா எங்கள் குலதேவனே (2)
பக்தி பரவசமாய் பணிந்துணை பூஜித்தேன்
பக்தரை காத்துமே பக்க துணை நீயிருப்பாய் - எண்ண எண்ண
அல்லும் பகலும் உன்னை அன்புடன் நேசித்தேன்
அல்லல் வராமல் காத்து அனுக்கிரஹம் செய்வாய்
செய்வினை யாவும் உன் ஜெபத்தில் மறைந்திடுமே
ஜெய ஜெய ஜெயவென ஜெயகோஷம் செய்திடுவோம் - எண்ண எண்ண
வள்ளி மாநகரில் வடதிசையில் அமர்ந்தவனாம்
நினைத்து துதிப்போர்க்கு நெஞ்சினில் நிறைந்தவனாம்
ஏற்றி தொழுபவர்க்கு எதிரில் வந்து நிற்பவனாம்
மனதார துதிப்பவர்க்கு மங்களங்கள் அருள்பவனாம்
பாடி துதிப்பவர்க்கு பக்கத்தில் வருபவனாம்
பேச்சியம்மா துணை கொண்டு பேரின்பம் அளிப்பவனாம்
என்றென்றும் துதிப்பவர்க்கு எங்கெங்கும் நிறைந்தவனாம்
சிவபனை ஆண்டவனாம் சீரான பேருடையான்
சிக்கலை தீர்ப்பவனாம் சிந்தை குளிர்விப்பவனாம்
என்றென்றும் துணையிருப்பான் எங்கள் குலநாயகனும்
சிந்தை மகிழ்ந்தும் சீருடன் துதிக்கும்கால்.
--------- * ------------------ * ---------
எண்ண எண்ண இனிக்குதய்யா எங்கள் குலதேவனே (2)
பக்தி பரவசமாய் பணிந்துணை பூஜித்தேன்
பக்தரை காத்துமே பக்க துணை நீயிருப்பாய் - எண்ண எண்ண
அல்லும் பகலும் உன்னை அன்புடன் நேசித்தேன்
அல்லல் வராமல் காத்து அனுக்கிரஹம் செய்வாய்
செய்வினை யாவும் உன் ஜெபத்தில் மறைந்திடுமே
ஜெய ஜெய ஜெயவென ஜெயகோஷம் செய்திடுவோம் - எண்ண எண்ண
No comments:
Post a Comment